Skip to content

திருமண தாமதம் : பெற்றோர் காரணமா?

அண்ணே வணக்கம்ணே !

பொதுவா பார்த்தா குரு,சுக்கிரன்,களத்ர பாவாதிபதி சோனியா இருந்தா தாமதம் ஏற்படும். டீப்பா பார்த்தா லக்னாதிபதியே பல்பு வாங்கியிருந்தாருன்னு வைங்க தாமதம் சகஜம். உ.ம் நீசம், 6,8,12 ல மாட்டறது, அல்லது மேற்படி அதிபதிகளோட சகவாசம் வச்சுக்கறது . அஸ்தங்கதம், நெல்ல இடத்துல நின்னு வக்ரம் அடையறது, இப்படி ஆயிரத்தெட்டு காரணம் இருக்கு.

கண்ணாலத்துக்கு ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு வகையில கோ ஆப்பரேட் பண்ணுது. ஒவ்வொரு பாவமும் ஒவ்வொரு வகையில கோ ஆப்பரேட் பண்ணுது.

மேஜரான பாவங்கள் கெட்டிருந்து 1 ,2 , 4, 5, 7, ( பெண்ணானால் 8) , 9 , 11 ( ஆணுக்கு ரெண்டாம் கல்யாணம்) ,12 பாவங்கள்ள எதாவது ஒன்னு பேர் சொல்லியிருந்தாலும் கண்ணாலம் நடந்துருது .( மத்ததெல்லாம் மத்த பாவங்களோட பலத்தை பொருத்து நடக்கும் – நடக்காம போகும் .அதுவேற சங்கதி)

அதே போல மேஜரான கிரகங்கள் கெட்டிருந்து குரு,சுக்கிரன் அல்லது 7 ஆம் பாவாதிபதிகள்ள ஒருத்தரு தம் கட்டி நின்னிருந்தாலும் கண்ணாலம் நடந்துருது ( மத்ததெல்லாம் மத்த கிரகங்களோட பலத்தை பொருத்து நடக்கும் – நடக்காம போகும் .அதுவேற சங்கதி)

இந்த ஆங்கிள்ள இந்த பதிவை எழுதினா ஜாதகம் இல்லாதவுக கழண்டுக்குவாய்ங்க. அதனால முந்தா நாள் திருமண தாமதத்துக்கு கொடுத்த காரணங்களை இன்னம் கொஞ்சம் அப்டேட் பண்ணி அவற்றை அடிப்படையா வச்சு அதுக்கு எந்த கிரகம் காரணமா இருக்கலாம்ங்கற ஹன்ச் – அதுக்கு என்ன பரிகாரங்கற டிப்ஸை தந்துர்ரன்.

பெற்றோர்களால் ஏற்படும் தாமதம்:

மாதா,பிதா செய்தது மக்களுக்குங்கறாப்ல பேரன்ட்ஸோட மேரீட் லைஃபே தகராறுன்னு வைங்க பசங்க மேட்டரு புட்டுக்குது

ஒரு அம்மா டீச்சரு -அவிக ஆத்துக்காரரு அரசு ஊழியர். அவிக சந்தோசமா வாழ்ந்த காலகட்டத்துல கருவான பையன், பெண் மட்டும் கண்ணாலம் நடந்து குப்பை கொட்டிக்கிட்டிருக்காய்ங்க. இவிக முட்டி மோத ஆரம்பிச்ச பிறவு பிறந்ததுல ஒரு டிக்கெட் கண்ணாலமாகி ஸ்க்ரூ லூஸாகி பிரிஞ்சு கிடக்கு, இன்னொரு டிக்கெட் முத்திக்கிடக்கு(வெண்டைக்காய் கணக்கா)

ஜாதகத்துல மாதா பிதான்னா பொதுவா சந்திர -சூரியர்கள். ( இரவில் பிறந்தவர்களுக்கு சனி பித்ருகாரகன் – பகலில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் மாத்ரு காரகன்). இவிக கெட்டிருந்தா மேற்படி கேஸ் மாதிரி இவிக திருமணம் தாமதமாக அப்பா,அம்மா அவிக வாழ்க்கையே ஒரு காரணமா இருக்கலாம்.

இதுக்கான பரிகாரங்கள் வருமாறு:

1.அப்பா,அம்மா வழியில் ஆதாயத்தை எதிர்பார்க்கக்கூடாது ( சொத்துக்கள் உட்பட -அவிக சொத்துக்கு ஆசைப்பட்டா அவிய கருமம் கூட வந்து ஒட்டிக்கும்)

2.அவிகளுக்கு நீங்க வாரி கொடுக்கலாமே தவிர அவிய கிள்ளி கொடுக்கிறதை கூட வாங்க கூடாது.

3.அவிக வழி உறவுல பெண் தேடக்கூடாது.

( எந்த கிரகம் கெட்டிருக்கோ அந்த கிரகம் காட்டும் அப்பா அல்லது அம்மாவை /அவிக வழி ஆதாயத்தை மட்டும் அவாய்ட் பண்ணா போதும்)

அடுத்து 4 ,9 ங்கற பாவங்கள் ரெம்ப முக்கியம் இந்த பாவங்கள் கெட்டாலும் இந்த கதிதான். இதுக்கான பரிகாரங்கள் வருமாறு:

4ஆம் பாவம்:

1.சொந்த வீடா இருந்தாலும் உங்க அறைக்கு நீங்களே ஒரு வாடகை ஃபிக்ஸ் பண்ணி அதை பாதி அம்மன் கோவில் உண்டியல்ல -பாதி சிவன் கோவில் உண்டியில போட்டுருங்க. வாடகை வீடா இருந்தா உங்க ஷேரை கான்ட்ரிப்யூட் பண்ணுங்க.(மொத்தத்தையும் நீங்களே பேர் பண்ணா விசேஷம்)

2.சொந்த வாகனத்துக்கு தடா .பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டையே யூஸ் பண்ணுங்க.

3.தாய் மேட்டர்ல ஒன்வே ட்ராஃபிக் வச்சுக்கோங்க. சட்டைக்கு பட்டன் தைக்க கூட விடாதிங்க. நீங்க வேணம்னா அவிக உள் பாவாடைக்கு நாடா போடலாம். ஃபேஸ் புக்ல ஜல்லியை விட இது மகா புண்ணியம்.

4.மேற்படிப்புக்கு குட்பை சொல்லிருங்க.

9ஆம் பாவம்:

1.அப்பா மேட்டர்ல ஒன்வே ட்ராஃபிக். சில்லறையா இல்லேன்னு வண்டிக்கு காத்தடிக்க சில்லறை கூட வாங்காதிங்க. நீங்க அவருக்கு எவ்ள வேணா செலவழிக்கலாம். அவர் வழி உறவை – சொத்தை கம்ப்ளீட்டா பாய்காட் பண்ணுங்க. சேவிங்ஸ் -முதலீடு எல்லாம் கண்ணாலத்துக்கு அப்பாறம் தான்னு டிசைட் பண்ணிக்கங்க.

2.அய்யாமாரு சொன்னாய்ங்கன்னு அந்த சேத்திரம் இந்த சேத்திரம்னு போயி காசை கரியாக்காதிங்க.

3.தூர தேச தொடர்புகளை அவாய்ட் பண்ணிட்டு குண்டு சட்டியில குதிரை ஓட்டுங்க..

(தொடரும்)

Related Posts Plugin for WordPress, Blogger...

Enter your email address:

About the Author

கடந்த 2009 ,மே முதல் ரீ என்ட் ரி கொடுத்து 8 லட்சம் வருகைகளை கடந்து வெற்றி நடை போட்டுவரும் வலைஞன். 2000 பதிவுகளை கடந்தவன். தொழில் முறை ஜோதிடன். ஜோதிட ஆய்வாளன். மக்கள் தரும் ஆலோசனை கட்டணத்தை ஊதியமாக கருதி இந்தியாவை பணக்கார நாடாக மாற்றியே தீர்வேன் என்று புலம்பி அலம்பல் செய்துவருபவன். சமீபத்தில் வெளியிட்ட ஜோதிடம் 360 நூலில் கூட இதற்காக ஒரு அத்யாயத்தையே வைத்திருப்பவன். இதற்காக சந்திரபாபு மீதே வழக்கு போட்டவன். 12 நாள் உண்ணாவிரதம் இருந்தவன். அனைத்தும் இழந்தவன். பின் துளிர்த்தவன். கம்யூனிஸ்டோ,பெரியாரிஸ்டோ எந்த இஸ்டோ அல்லன். ஹ்யுமேனிஸ்ட் என்று வேண்டுமானால் சொல்லலாம். மணமாகி (1991) மனைவி, 18 வயது மகள் ,ஸ்வீட்டி என்ற பெண் பாமரேனியன் குட்டி மற்றும் லட்டு எனும் ஆண் பாமரேனியன் நாய் குட்டி அடங்கிய குடும்பம் என்னுடையது. ஆன்மீகத்தையும் ஒரு விஞ்ஞானமாக நிரூபிக்க துடிப்பவன். ஃப்ரம் செக்ஸ் டு சூப்பர் பவர் என்ற ஓஷோவின் சித்தாந்தத்தை கொள்கை ரீதியில் ஆதரிப்பவன். சான்றோருடைத்து என்ற பெருமை வாய்ந்த சித்தூர்(AP) நகரில் வசிப்பவன். சில காலம் பல நிறுவனங்களில் பணி புரிந்தவன். சமீபத்தில் தினத்தந்தி. Age 43. 1987லேயே முதல் சிறுகதை பாக்யாவில் பிரசுரமானபோதிலும் தமிழ் அச்சு ஊடகத்தில் நிலவும் பிராமணீயத்தால் வெளிச்சத்துக்கு வராதவன். லேட்டஸ்ட் உதாரணமாக நீங்கள் கேள்விப்பட்டும் அறியாத வலைப்பூக்கள் பற்றி பிராமண பத்திரிக்கைகளில் எழுதப்படுவது. தமிழ்10 ரேங்குகளில் முதல் 50 க்குள் தொடரும் இந்த வலைப்பூ கண்டு கொள்ளப்படாதது. 2007ல் ஜோதிட பூமி இதழில் நவகிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் , அனைவருக்கும் தனயோகம் போன்ற ஜோதிட ஆராய்ச்சி தொடர்கள் எழுதிய‌வன். சொந்தத்தில் வாங்குவோரை நம்பாமல் விளம்பரதாரர்களை மட்டும் நம்பி இண்டியன் பொலிட்டிக்கல் க்ளோசப் எனும் மாதமிருமுறை (தெலுங்கில்) நடத்துபவன். தெலுங்கில் வலை தளம் துவக்கி 2008 நவம்பர் டு மேக்குள் 20000 ஹிட்ஸ் கண்டு அங்கும் பிராமண சதியால் மொக்கையானவன். தற்போது தெலுங்கிலும் ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருபவன்.

Spread The Love, Share Our Article

  • Delicious
  • Digg
  • Newsvine
  • RSS
  • StumbleUpon
  • Technorati
  • Twitter

Related Posts